×

மன்னார்குடியில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் கண்காணிப்பாளர் ஆய்வு

மன்னார்குடி, பிப்.17: ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள மன்னார்குடி பின்லே அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த நிலையில் ஓட்டு எண்ணும் மையத்தை துணை கலெக்டரும் தேர்தல் கண்காணிப்பாளருமான கயல்விழி, நகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சென்னுகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது, தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள விதிகளின்படி வாக்கு எண்ணிக்கையை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆய்வின்போது நகராட்சி நகரமைப்பு அலுவலர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Mannargudi ,
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...