×

பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணி மும்முரம் ஒரத்தநாடு வேளாண்மை மையத்தில் விவசாய குழுக்களுக்கு இடு பொருட்கள் வழங்கல்

ஒரத்தநாடு, பிப்.17: ஒரத்தநாடு வேளாண்மை மையத்தில் விவசாய குழுக்களுக்கு இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஒரத்தநாடு வேளாண்மை துறையில் கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் வாண்டையார் இருப்பு மற்றும் மூர்த்தி அம்பாள்புரம் உழவர் உற்பத்தியாளர் குழு நபர்களுக்கு வேளாண் இடுபொருட்களை உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் பாலசரஸ்வதி வழங்கினார். வாண்டையார் இருப்புஉழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு இரண்டு பவர் டில்லர் மற்றும் 3 ரொட்டவேட்டர் கருவிகள், மூர்த்தி அம்பாள்புரம் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு 3 பவர் டில்லர் மற்றும் இரண்டு ரூபாய் வழங்கப்பட்டது. ஒவ்வொரு குழுவிற்கும் ரூபாய் 5 லட்சம் அரசு மானியமாக வழங்கப்பட்டது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு விஜயகுமார் உடனிருந்தார். பண்ணை கருவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் நடனகோபால செய்திருந்தார். மேலும் இதில் அட்மா திட்ட அலுவலர்கள் ஏராளமான விவசாயிகள் மற்றும் வேளாண்மை அலுவலர்களும் கலந்து கொண்டனர்

Tags : Papanasam Municipality Office ,Orathanadu Agricultural Center ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ