×

அரிமளம் அருகே ஓணாங்குடியில் இல்லம் தேடி கல்வி திட்ட துவக்க விழா

திருமயம். பிப்.17: அரிமளம் அருகே நடைபெற்ற இல்லம் தேடி கல்வி துவக்க விழாவில் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.தமிழகம் முழுவதும் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கல்வியில் இடைநிற்றல் குழந்தைகள், கல்வி கிடைக்காத குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி துவக்க விழா நேற்று நடைபெற்றது. ஓணாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.

அரிமளம் ஒன்றிய குழு தலைவர் மேகலா முத்து சிறப்புரையாற்றினார். இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அரங்க கோபாலகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மாரிக்கண்ணு, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் ஆகியோர் இல்லம் தேடி கல்வி நோக்கம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறினர். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார்.இல்லம் தேடி கல்வி தன்னார்வலராக கீர்த்தனா, ஐஸ்வர்யா, கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சேவியர் நன்றி கூறினார்.

Tags : Onangudi ,Arimalam ,
× RELATED அரிமளம், திருமயம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலுக்கு கருகும் தைலமரங்கள்