×

ராயனூர்- செல்லாண்டிபாளையம் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

கரூர், பிப். 17: ராயனூர் செல்லாண்டிபாளையம் சாலையை விரிவாக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் இருந்து செல்லாண்டிபாளையம், சுக்காலியூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. தார்ச்சாலையாக உள்ள இந்த சாலை குறிப்பிட்ட தூரம் வரை ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவுக்கு சாலையில் நிலை உள்ளது.

இந்த சாலையின் வழியாக கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன. ஆனால், சாலை குறுகிய நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை சாலையை விரிவுபடுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Rayanoor-Cellandipalayam road ,
× RELATED ராயனூர் செல்லாண்டிபாளையம் சாலை விரிவுபடுத்தப்படுமா?