×

குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை: திமுக வேட்பாளர் துர்காதேவி நடராஜன் உறுதி

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 167வது வார்டு திமுக வேட்பாளர் துர்காதேவி நடராஜனை ஆதரித்து, ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன் நேற்று நங்கநல்லூர் கண்ணன் நகர், ஸ்டேட் பாங்க் காலனி, ஈஸ்வரன் நகர் போன்ற பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளர் துர்காதேவி நடராஜன் பேசுகையில், ‘‘என்னை வெற்றிபெற செய்தால் தாய்மார்களுக்கு உரிமை தொகை ரூ.1000 பெற்று தருவேன். நங்கநல்லூர் பகுதியில் சிசிடிவி கேமராக்கள், வடிகால், புதிய தொழில்நுட்பத்தில் பாதாள சாக்கடை, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பேன்,’’ என்றார்.

திமுக வட்ட செயலாளர் ஜெ.நடராஜன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ஜெயராம் மார்த்தாண்டன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஸ்ரீகாந்த், கன்டோண்மென்ட் நகர செயலாளர் முன்னாள் கவுன்சிலர் விஜயசங்கர்,
சி.முத்து, மேனியல், இஸட்.பாபு, மாறன், சுனில், பெர்னாண்டஸ், மார்க்கஸ், ஜெய், 167வது வட்ட நிர்வாகிகள் நாகராஜன், என்.வேலு, ரமணா, பிரான்சிஸ், சதீஷ், குருமூர்த்தி, கணேசன், சூர்யநாராயனன், ராஜ்குமார், சரவணன், முருகன், மெடிக்கல் பாபு, மகேஷ், வஜ்ரவேல், பாலாஜி, எம்.சதீஷ், விக்னேஷ், ஜனா, விக்கி, ராமு, அசோக்குமார், மகளிரணி ஜாக்குலின் சித்ரா, காங்கிரஸ் சார்பில் மாவட்ட துணை தலைவர் அய்யம்பெருமாள், வட்ட தலைவர் குருபாரதி, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Pimuga ,Durkadevi Natarajan ,
× RELATED திமுக, காங். வேட்பாளர்கள் வாக்கு...