×

சி.ஐ.டி.நகர் காவலர் குடியிருப்பில் ராஜா அன்பழகன் வாக்கு சேகரிப்பு


சென்னை: சென்னை மாநகராட்சி 141வது வார்டு திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன், நேற்று காலை தனது தாத்தாவும், தி.நகர் பகுதி திமுக முன்னாள் செயலாளருமான பழக்கடை கி.ஜெயராமனின் 38ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திவிட்டு, பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, சி.ஐ.டி.நகரில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், முன்கள பணியாளர்
களான காவலர்களுக்கு வார விடுமுறை, பணியின்போது ஏற்படும் விபத்துக்கு இலவச மருத்துவ சிகிச்சை, பணியின்போது ஏற்படும் எதிர்பாரா இறப்புக்கு ரூ.1 கோடி துயர்நீக்க உதவி தொகை போன்ற திமுக அரசின் நலத்திட்டங்கள் தொடரவும், உள்ளாட்சியில் நல்லாட்சி மலரவும் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’’ என்றார். பின்னர், அங்குள்ள சாதுல்லா தெரு மற்றும் அப்துல் அஜீஸ் தெரு ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, இஸ்லாமியர்களிடம் பிரசாரத்தில் ஈடுபட்டார். கோ.உதயசூரியன், ஆ.ஏழுமலை, வட்ட செயலாளர்கள் எஸ்.லட்சுமிகாந்தன், வி.கே.மணிகண்டன், மாவட்ட பிரதிநிதிகள் ஜெ.ஜானகிராமன், எல்.வீரப்பன், எஸ்.ராமலிங்கம், எல்.குமரன், ரா.கர்ணா, வழக்கறிஞர் ஜெயவேல், லயன் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

Tags : Raja Anpalagan ,CID Nagar police station ,
× RELATED திமுக எம்எல்ஏ அன்பழகன் மகன் ராஜா அன்பழகன் 6 ஆயிரம் வித்தியாசத்தில் வெற்றி