×

அந்தியூர் அருகே பள்ளி மாணவியை காதலித்த வாலிபரை அடித்து கொன்ற 2 பேர் கைது

அந்தியூர், பிப். 12: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள ஆப்பக்கூடல் மூங்கில்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (23). பெயிண்டர். இவர் தனது பாட்டியுடன் வசித்து வந்தார்.  இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியிடம் பழக்கம் ஏற்பட்டது. இது பற்றி மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து வெங்கடேஷை கண்டித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 8ம் தேதி இரவு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் வெங்கடேஷ்யை மாணவியின் தந்தை சரவணன் மற்றும் அத்தை சித்ரா தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து வெங்கடேஷ், அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின், தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்ட வெங்கடேஷ் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வெங்கடேஷ் மீது தாக்குதல் நடத்திய மாணவியின் தந்தை சரவணன் (39), அவரது அத்தை சித்ராவை (42) ஆகியோர் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Andiur ,
× RELATED வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் காட்டு யானை நடமாட்டத்தால் அச்சம்