காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சிவனடியார்கள் திருக்கூட்டம், 50வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச பரமாச்சாரியார் கலந்து கொண்டார். இதில், ஓதுவார்களுக்கு பொற்கிழி பரிசு மற்றும் சிறந்த சேவகர்களுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும், காஞ்சிபுராண உரைநடை பகுதி ஒன்று என்ற நுால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, காஞ்சி புராண சிறப்பு சொற்பொழிவு, மாலையில் சமய கருத்தரங்கம் நடந்தது. விழாவில், ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்து வரும் ஓய்வு பெற்ற காவலர் சீனிவாசனின் பணியை, தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச பரமாச்சாரியார் பாராட்டி சிவதர்மசீலர் என்ற பட்டத்தை வழங்கினார்.