×

கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி முகாம்

மன்னார்குடி, பிப். 12: தமிழகத்தில் பேரூராட்சி,நகராட்சி,மாநகராட்சிகளுக்கான நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ல் நடைபெற உள்ளது. திருவாரூர் கூத்தாநல்லூர் நகராட் சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில் பணியாற்ற 87 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற இருக்கிற வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிருஷ்ணவேணி தலைமையில் கூத்தாநல்லூர் அடுத்த லெட்சுமாங்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்றது. முகாமில், வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுதல், வாக்குப்பதிவு அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள், கொரோனா தொற்று ஏற்பட்ட வாக்காளர்களுக்கான வாக்குப் பதிவு நேரம் இவை குறித்து மண்டல அலுவல ர்கள் அலெக்ஸ், தங்கதுரை ஆகியோர் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சியினை வழங்கினர். மாவட்ட வழங்கல் அலுவலரும் தேர்தல் பார்வையாளருமான கீதா தேர்தல் பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரன் செய்திருந்தார்.

Tags : Letsumangudi ,Koothanallur ,
× RELATED மதுபோதையில் தகராறு செய்ததால் மகனை அடித்துக்கொன்ற தந்தை