×

ஒரத்தநாடு அருகே பைக்கிலிருந்து விழுந்து கார் டிரைவர் பலி

ஒரத்தநாடு, பிப்.12: ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉளூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் சுந்தர்ராஜன் (31) கார் டிரைவர். சம்பவத்தன்று இவர் மேல உளூரிலிருந்து சின்னபருத்தி கோட்டைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்த சுந்தர்ராஜன் பலத்த காயமடைந்தார். அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தரராஜன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags : Orathanadu ,
× RELATED ஒரத்தநாட்டில் தீ தொண்டு நாள், வார...