ராசிபுரம், பிப்.11: ராசிபுரம் நகராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என திமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார். ராசிபுரம் நகராட்சி வார்டு பகுதிகளில், நகர செயலாளர் சங்கர் தலைமையில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் திமுகவினர் ஈடுபட்டு வருகிறார்கள். நகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணன் கோயில்தெரு, தியாகராஜ சாமி தெரு, கண்ணையா தெரு உள்ளிட்ட 15வது வார்டு பகுதியில் போட்டியிடும் கவிதாசங்கர், மகளிர் அணியினர் வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளையும், ராசிபுரம் நகராட்சி பகுதியில் கடந்த 8மாத காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்து, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ராசிபுரம் நகராட்சியில் சாலை மற்றும் சாக்கடை வசதிகள் செய்து தரப்படும் எனவும், நிரந்தரமாக குடிநீர் பிரச்னைகள் தீர்க்கப்படும் எனவும் உறுதியளித்தார். பொதுமக்களுக்கு புதிதாக ரேஷன் கார்டு கிடைக்கவும், அரசின் திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்கவும் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரித்தார். அப்போது வார்டு செயலாளர் சக்தி, பாபு, மகளிரணி சுசீலா, கோமதி, பிரபா, சுந்தரி, இளைஞரணி விக்கி, கார்த்தி, யோகராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.