×

நங்கநல்லூர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை: திமுக வேட்பாளர் துர்காதேவி நடராஜன் வாக்குறுதி

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 167வது வார்டு திமுக வேட்பாளர் துர்காதேவி நடராஜனை ஆதரித்து, ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன் நேற்று நங்கநல்லூர் லட்சுமி நகர் 1 முதல் 7வது தெரு வரை, 40வது தெரு முதல் 45வது தெருக்கள் வரை மற்றும் டிஎன்ஜிஓ காலனி போன்ற பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது, திமுக வேட்பாளர் துர்காதேவி நடராஜன், ‘என்னை வெற்றிபெற செய்தால் நங்கநல்லூர் குடியிருப்பு பகுதிகளில் மழைக் காலங்களில் வெள்ளம் சூழ்வதை தடுக்க, அகலமான கால்வாய் அமைத்து தருவேன். பழுதடைந்த பாதாள சாக்கடை குழாய்களை மாற்றி, தொழில்நுட்ப வசதியுடன் புதிய குழாய் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்,’ என்றார்.

ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன், வட்ட செயலாளர் ஜெ.நடராஜன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர். ஜெயராம் மார்த்தாண்டன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் காந்த், கன்டோண்மென்ட் நகர திமுக செயலாளர் முன்னாள் கவுன்சிலர் விஜயசங்கர், சி.முத்து, மேனியல், இஸட்.பாபு, மாறன், சுனில், பெர்னாண்டஸ், மார்க்கஸ், ஜெய் மற்றும் 167வது வட்ட திமுக நிர்வாகிகள் நாகராஜன், என்.வேலு, ரமணா, பிரான்சிஸ், சதீஷ், குருமூர்த்தி, கணேசன், சூர்யநாராயணன், ராஜ்குமார், சரவணன், முருகன், மெடிக்கல் பாபு, மகேஷ், வஜ்ரவேல், பாலாஜி, எம்.சதீஷ், விக்னேஷ், ஜனா, விக்கி, ராமு, அசோக்குமார், மகளிரணி ஜாக்குலின் சித்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,Durgadevi Nadarajan ,Nanganallur ,
× RELATED நங்கநல்லூர் வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரி ஆய்வு