×

கரூர், குளித்தலையில் தேசிய மக்கள் நீதிமன்றம்


கரூர், பிப்.11: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் மார்ச் 12ம்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணிமலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும், குளித்தலை சார்பு நீதிமன்றத்திலும் நடைபெறுகிறது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் திருமண வாழ்க்கை சம்பந்தமான வழக்குகள் தவிர, காசோலை மோசடி வழக்குகள், வங்கிக் கடன், விபத்து வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. எனவே, இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் மாவட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.

Tags : National People's Court ,Kulithalai, Karur ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டம் வளர்ச்சி பெற...