×

செந்துறை பகுதி நெடுஞ்சாலைகளில் வர்ணம்பூசும் பணி

செந்துறை, பிப்.11: செந்துறை பகுதியில் நெடுஞ்சாலைகளில் வர்ணம் பூசும்பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. செந்துறை நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாலங்கள், கல்வெட்டுகள், மரங்கள், மைல் கற்கள், வேகத்தடைகள் ஆகியவற்றிற்கு வர்ணம் பூசுதல், பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் மழைக்காலம் முடிந்தவுடன், தற்பொழுது முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. கோட்டப்பொறியாளர் உத்தண்டி உத்தரவின்படி உதவிக்கோட்டப் பொறியாளர் ராஜா, உதவிப் பொறியாளர் முரளிதரன் ஆகியோர் மேற்பார்வையில் சாலைப்பணியாளர்கள் வர்ணம் பூசும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். சாலையோர மரங்கள், பாலங்களுக்கு கருப்பு, வெள்ளை வர்ணம் பூசப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு இரவு நேரங்களில் விபத்தின்றி பாதுகாப்பாக பயணம் செய்ய முடிகிறது என தெரிவிக்கின்றனர்.

Tags : Sendurai ,
× RELATED செந்துறையில் டீக்கடையில் காஸ் கசிவு