×

பரமத்திவேலூர் விற்பனை கூடத்தில் 1000 மெட்ரிக் டன் கொப்பரையை நேரடி கொள்முதல் செய்ய இலக்கு

நாமக்கல், பிப்.10: நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், வருவாயை பெருக்கவும், தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில். கொப்பரையை மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு கொள்முதல் இலக்காக 1000 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கொப்பரை விலை  கிலோ ₹73.19 முதல் ₹90.99 வரை உள்ளுர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகள் நலன் கருதி நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு, மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவை கொப்பரை விலையாக கிலோவுக்கு ₹105.90ம், பந்து கொப்பரை தேங்காய் கிலோ ₹110க்கும், அடுத்த 6மாத காலத்திற்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டம்  பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் நிலையம் செயல்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு ஆகிய விவரங்களுடன், பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவுசெய்து கொள்ளலாம். கொப்பரை கொள்முதல் பிப்ரவரி மாதம் துவங்கி ஜூலை மாதம் வரை நடைபெற உள்ளது. கொப்பரைக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளின் நலனிற்காக மேற்கொண்டுள்ள இந்த கொள்முதல் திட்டத்தில், தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறவும். இவ்வாறு அகலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

Tags : Paramathivelur ,
× RELATED போதையில் நண்பர்களுடன் எஸ்ஐயை தாக்கிய விஏஓ