×

தாம்பரம் மாநகராட்சி 49வது வார்டை முன்மாதிரியான வார்டாக மாற்றுவேன்: திமுக வேட்பாளர் காமராஜ் உறுதி

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் 49வது வார்டில் திமுக சார்பில் தும்பிதாம்பரம் நகர முன்னாள் துணைத் தலைவர் காமராஜ் போட்டியிடுகிறார். இவர் வார்டு முழுவதும் உள்ள பொதுமக்களை வீடு வீடாக நேரில் சென்று சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் அவருக்கு பட்டாசுகள் வெடித்து, மலர்கள் தூவி, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இதில் தாம்பரம் மாநகராட்சி 49வது வார்டுக்கு உட்பட்ட முத்துலிங்கம் தெருவில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்த காமராஜ் பின்னர் கோயிலுக்கு வந்த பக்தர்கள் இடம் உதயசூரியன் சின்னத்தில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறி வாக்குகள் சேகரித்தார்.

மேலும் தான் தாம்பரம் நகர துணைத் தலைவராக இருந்தபோது எப்படி சிறப்பாக மக்கள் பணி செய்தேனோ அதேபோல தாம்பரம் மாநகராட்சி முதல் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பொதுமக்களின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை உடனுக்குடன் செய்து முடித்து 49வது வார்டை தாம்பரம் மாநகராட்சியிலேயே முன்மாதிரியான வார்டு ஆக மாற்றி காட்டுவேன் என உறுதியளித்தார். இந்த வாக்கு சேகரிப்பின்போது பா.பாரதி, கோ.ராஜேந்திரன், பட்டுராஜா, கந்தசாமி, சீனா, ரமேஷ், பாஸ்கர், டி.எம்.ஜி.ஆனந்த், பன்னீர்செல்வம், ஏழுமலை, சதீஷ், தனஞ்செயன், பாலா, கோபி, குருமணி, கணபதி, மைக்கேல், நியூட்டன் மற்றும் ஏராளமான திமுகவினர் உடனிருந்தனர்.

Tags : Tambaram Municipality ,Kamaraj ,Dimugha ,
× RELATED காமராஜர் பல்கலை துணைவேந்தர் ராஜினாமா