×

83வது வார்டு கள்ளிகுப்பம் பகுதியில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்ட பணி: திமுக வேட்பாளர் உஷா நாகராஜ் உறுதி

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலம் 83வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் உஷா நாகராஜ் போட்டியிடுகிறார். இவர், நேற்று கள்ளிகுப்பம் பகுதியான முத்தமிழ் நகர், காந்தி நகர் ஆகிய இடங்களில் வீடு, வீடாக சென்று வாக்குசேகரித்தார். அப்போது, அவருக்கு மக்கள் மலர் தூவி, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது, பொதுமக்களிடம் வேட்பாளர் உஷா நாகராஜ் கூறுகையில், `இந்த பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப்பணிகள் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெறாமல் கிடப்பில் கிடக்கிறது.

நான் வெற்றி பெற்றவுடன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ ஆகியோரின் ஒத்துழைப்புடன் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப்பணிகளை நிறைவேற்றி கொடுப்பேன். எனவே, எனக்கு நீங்கள் உதசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்’ என்றார். இந்த வாக்கு சேகரிப்பின்போது அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ், வட்ட செயலாளர் ஏ.சுந்தர்ராஜ், நிர்வாகிகள் ப.பொற்செழியன், கே.ராஜ்குமார், பாபு இளஞ்செழியன், சு.மோகன்குமார், என்.குமாரவடிவேல், பாபு, லட்சுமி, எம்.டில்லிபாபு, கோவிந்தன், செல்வம், முத்து, சிவராமன், ஜெயபாலன், திருநாவுக்கரசு, கு.டில்லிபாபு, அமிர்தலிங்கம், பூ.நாகராஜ், தரணி, உஷா உள்பட கட்சி தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Tags : Kallikuppam ,DMK ,Usha Nagaraj ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி