×

மேலகரம் பேரூராட்சியில் திமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு

தென்காசி,பிப்.10:  மேலகரம் பேரூராட்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு திமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு பேரூர் செயலாளர் சுடலை தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் வேலுச்சாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கிட்டு என்ற கிருஷ்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜீவானந்தம், விசிக மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது: உள்ளாட்சித்தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் வருத்தப்பட வேண்டாம். இன்னமும் நிறைய வாய்ப்புகள் உள்ளது.

உரிய நேரத்தில் உரியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஒற்றுமையாக வெற்றிக்கு பாடுபட வேண்டும். நானும் 96ம் ஆண்டுமுதல் சீட் கேட்டு வருகிறேன். கடந்த முறை எப்படியும் கிடைக்கும் என்று நினைத்தேன். கூட்டணி கட்சி காங்கிரசிற்கு ஒதுக்கப்பட்டு விட்டது. பொறுமையாக இருந்ததால் தான் மாவட்ட செயலாளராக உங்கள் முன் நிற்கிறேன்’ என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் ரமேஷ்குமார், சம்முகுட்டி, ஒன்றிய பிரதிநிதிகள் கல்யாணசுந்தரம், யாகவா சுந்தர், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் நாகராஜ் சரவணார், இளைஞரணி கபிலன், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், பி.எஸ்.மாரியப்பன், வார்டு நிர்வாகிகள் முருகன், ஆறுமுகம், பாலு, செல்வராஜ், சுந்தரம் என்ற சேகர், பட்டன், குருசாமி, குமாரவேல், சந்திரன்,ஆவின் முருகன், ஈஸ்வரன், மணி என்ற ஈஸ்வரன், கோமு, நன்னை பாலு, சுந்தர், குத்தாலிங்கம், ஆத்தியப்பன், காசிவிசுவநாதன், பகவதிராஜ், கௌதம், அருண், கணேசன், ஒன்றிய இளைஞரணி முருகேசன், இசக்கிராஜ், பசுங்கிளி, ஆயிரப்பேரி முத்துவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK alliance ,Melakaram municipality ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...