தூத்துக்குடி, பிப். 10: தூத்துக்குடி மாநகராட்சி 39வது வார்டு அதிமுக வேட்பாளர் திருச்சிற்றம்பலத்தை ஆதரித்து மாவட்ட செயலாளர் சண்முகநாதன் பிரசாரம் செய்தார்.தூத்துக்குடி மாநகராட்சி 39வது வார்டு அதிமுக வேட்பாளர் திருச்சிற்றம்பலம் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். தெற்கு மாவட்ட எஸ்.பி.சண்முகநாதன் பிரசாரத்தை தொடங்கி வைத்து வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளர் திருச்சிற்றம்பலம், அனைத்து வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு கொண்டு வரவும், வார்டு மக்களுக்கு ரேஷன் கார்டு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், திருமண நிதியுதவி, முதியோர் உதவித்தொகை பெற்றுத் தருவேன். குற்ற செயல்களை தடுக்க அனைத்து தெருக்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த ஏற்பாடு செய்வேன் என உறுதியளித்தார். பிரசாரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி சுதாகர், எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, வக்கீல்கள் பிரபு, சேகர், நகராட்சி முன்னாள் தலைவர் ஹென்றி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், நிர்வாகிகள் டைகர் சிவா, சாமுவேல், ரமேஷ், கேபிள் மணி, சுதாகர், சதீஷ்குமார், ஆறுமுகம், வட்ட செயலாளர் முரளி, ஜாண்சன், லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.