×

பழநியில் எஸ்எஸ்ஐயை அரிவாளால் வெட்டியவர் கைது


பழநி, பிப். 9:  பழநியில் எஸ்எஸ்ஐயை அரிவாளால் வெட்டிய விவகாரத்தில் போலீசார் வாலிபர் ஒருவரை கைது செய்துள்ளனர். பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணிபுரிந்து வருபவர் சந்தானகிருஷ்ணன் (50). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுதாராபுரம் சாலையில் இருந்து புதுநகர் செல்லும் சாலையில் தனது நண்பரான ஆனந்தன் (48) என்பவருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலருக்கும், சந்தானகிருஷ்ணனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இத்தகராறில் சந்தானகிருஷ்ணன், ஆனந்தனுக்கு அரிவாள் மற்றும் பாட்டிலால் வெட்டு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பழநி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தகராறில் ஈடுபட்டு எஸ்எஸ்ஐயை வெட்டியதாக பாண்டியன் நகரை சேர்ந்த யுவராஜ் (24) என்பவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான சிலரை தேடி வருகின்றனர். போலீசார் இந்நபர்கள் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : SSI ,Palani ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ,...