×

நண்பரிடம் 3 கார்கள் வாங்கி மோசடி செய்த வாலிபர் கைது வேலூரில் சுற்றுலா செல்வதாக கூறி

வேலூர், பிப்.9: வேலூரில் சுற்றுலா செல்வதாக கூறி நண்பரிடம் 3 கார்கள் வாங்கி மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.வேலூர் கஸ்பா சின்ன மசூதி தெருவை சேர்ந்தவர் ஹாரூண். அண்ணா சாலையில் கார் ஒர்க்ஷாப் மற்றும் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது நண்பர் சின்ன அல்லாபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் வினோத்குமார்(28). கடந்த டிசம்பர் மாதம் 20ம் தேதி வினோத்குமார், குடும்பத்துடன் சுற்றுலா செல்லவேண்டும் எனக்கூறி ஹாருணிடம் 3 கார்களை கேட்டுள்ளார். நண்பர் என்பதால் 3 கார்களையும் ஹாரூண் கொடுத்துள்ளார். அதன்படி கார்களை எடுத்துச்சென்ற வினோத்குமார் இதுவரை திருப்பி தரவில்லையாம்.

இதுகுறித்து ஹாரூண் பலமுறை சென்று வினோத்குமாரிடம் கார்களை கேட்டுள்ளார். ஆனால் அவர் திருப்பித்தராமல் பல்வேறு காரணங்களை கூறி ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஹாரூண் வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் கார்களை உள்வாடகைக்கு விட்டுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags : Walibur ,Vellore ,
× RELATED இளம்பெண் ஆபாச வீடியோவை நண்பர்களுக்கு...