×

(தி.மலை) பெண் அரசு ஊழியர் வீட்டில் 9 சவரன் நகை திருட்டு மர்ம ஆசாமிகள் கைவரிசை திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை,பிப்.9:திருவண்ணாமலையில் பெண் அரசு ஊழியர் வீட்டில் 9 சவரன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர்.திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள இடுக்குபிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கவிதா(49), இவர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் இறந்துவிட்டார். இவர் கடந்த 5ம் தேதி வெளியூரில் நடந்த தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் திறந்து கிடந்துள்ளது. மேலும், அதிலிருந்து 9 சவரன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கவிதா திருவண்ணாமலை தாலுகா போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


Tags : Thimalai ,Assamese ,Thiruvannamalai ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...