×

(செய்திஎண்07) நகைக்கடை உரிமையாளர் காரில் எடுத்து சென்ற 4.14 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் பறக்கும் படையினர் அதிரடி ஆரணியில் உரிய ஆவணமின்றி

ஆரணி, பிப்.9: ஆரணியில் உரிய ஆவணமின்றி நகைக்கடை உரிமையாளர் காரில் எடுத்து சென்ற 4.14 கிலோ வெள்ளி பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நகராட்சித் தேர்தலையொட்டி 3 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆரணி-தேவிகாபுரம் செல்லும் சாலையில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர், ஆரணி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரோஸ்முத்து தலைமையில் போலீசார் சரவணன் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆரணியில் இருந்து தேவிகாபுரம் நோக்கி சென்ற காரை மடக்கி சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி வெள்ளி கால் கொலுசுகள், குங்கும சிமிழ், காப்பு என ₹4 லட்சம் மதிப்பிலான 4.14 கிலோ வெள்ளி பொருட்கள் எடுத்து சென்றது தெரியவந்தது.

உடனே, பறக்கும் படையினர் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, நடத்திய விசாரணையில், காரில் இருந்தவர் ஆரணி டவுன், அருணகிரி தெருவை சேர்ந்த ராஜேந்திரகுமார்(48), நகை கடை உரிமையாளர் என்பதும், ஆரணி அடுத்த தேவிகாபுரத்தில் நகை கடை வைத்து நடத்தி வரும் இவர் கடைக்கு விற்பனைக்காக வெள்ளிப்பொருட்கள் எடுத்து சென்றது தெரியவந்தது.மேலும், ராஜேந்திரன் கொண்டுவந்த வெள்ளி பொருட்களுக்கு உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்து நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ்செல்விடம் ஒப்படைத்தனர். அப்போது, தேர்தல் நடத்தும் அலுவலர் வெள்ளிப்பொருட்களுக்கு உரிய ஆவணங்களை கொண்டு வந்து காண்பித்துவிட்டு பொருட்களை திரும்ப பெற்று கொள்ளுமாறு ராஜேந்திரனிடம் தெரிவித்தார்.

பாக்ஸ்...பேளூரில் ₹2 லட்சம் பறிமுதல்போளூர் மண்டல துணை தாசில்தார் ச.சிவலிங்கம் தலைமையில் ஏட்டு நிர்மல்குமார், சங்கீதா உட்பட பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் போளூர் அருகே இலுப்பகுணம் கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்தவரை மடக்கி சோதனை செய்தனர். இதில் ₹2 லட்சம் இருந்தது. விசாரணையில், படவேடு மங்களாபுரம் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் எனவும், குடும்ப தேவைக்காக பிறரிடம் கடன் வாங்கி ₹2 லட்சம் எடுத்து செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால், அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால், உரிய ஆவணங்கள் காட்டி பணத்தை பெற்று செல்லும்படி கூறி பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த பணத்தை களம்பூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரி ந.லோகநாதனிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் அந்த பணத்தை நேற்று போளூர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார்.கேப்ஷன். ஆரணியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற 4.14 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து நகராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ்செல்வியிடம் ஒப்படைத்தனர்.

Tags : Flying Troops ,
× RELATED நாமக்கல் அருகே தொழிலதிபர் வீட்டில்...