×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி உறுதி முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் பேட்டி

வைகுண்டம், பிப்.9:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சரும் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் தெரிவித்தார்.வைகுண்டத்தில் அதிமுக பேரூராட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், வைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசிராஜன், தொழிலதிபர் ஏ.பி. சண்முகசுந்தரம், ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.

கூட்டத்தில், வைகுண்டம் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் சண்முகநாதன் பேசுகையில், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக வெற்றி பெறும். என்றார்.கூட்டத்தில், அதிமுக நகர செயலாளர் காசிராஜன், முன்னாள் நகர செயலாளர் சண்முகசுந்தரம், கிளை செயலாளர் இருளப்பன், ஆப்பிள் ராமசாமி, எஸ்டிடி ரவி, ஒர்க் ஷாப் ரவி, மகாராஜன், சுந்தர், திருமால், அண்ணா தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் பொன்ராஜ், வார்டு செயலாளர்கள் பெருமாள், பிச்சையா, அய்யனார், மாரியப்பன், கடிகாரம் துரை, பிரேம்குமார், திருமால் மாரியப்பன், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : minister ,SP Shanmuganathan ,AIADMK ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...