×

குளித்தலை நீலமேக பெருமாள்

கோயிலில் ரத சப்தமி உற்சவம்
குளித்தலை, பிப்.9: குளித்தலை நீலா கமல நாயகி சமேத நீலமேகப் பெருமாள் கோயிலில் நேற்று ரத ஸப்தமி நிகழ்ச்சியில் பெருமாள் சப்த வாகனங்களில் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நேற்று காலை 6.15 மணிக்கு சூரிய பிரபை, 8 மணிக்கு ஹம்ச வாகனம், 10 மணிக்கு சேஷ வாகனம், 11 மணிக்கு ஹனுமந்த வாகனம், அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு கருட சேவை, 7 மணிக்கு யானை வாகனம் மற்றும் இரவு 8 மணிக்கு சந்திர பிரபை என 7 வாகனங்களில் பெருமாள் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் கருட வாகன புறப்பாடு மட்டும் பெரிய வீதிகளில் உள்ள 8 வீதியில் நடைபெற்றது. மற்ற வாகனங்கள் தேர் வீதிகளில் உள்ள நான்கு வீதிகளில் புறப்பாடு நடைபெற்றது. ரதசப்தமி நாளன்று பெருமாளின் 7 வாகனங்கள் புறப்பாடுகளில் தரிசனம் செய்வது எல்லாவித பலன்கள் கிடைக்க வல்லது என்பது ரிஷி வாக்கு என்பதால் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பெருமாள் தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செயல் அலுவலர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு