×

167வது வார்டு திமுக வேட்பாளர் துர்காதேவி நடராஜனை ஆதரித்து திமுகவினர் வாக்கு சேகரிப்பு

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலந்தூர் 167வது வார்டில் திமுக சார்பில் வேட்பாளர் துர்காதேவி நடராஜன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து திமுக வட்ட செயலாளர் ஜெ.நடராஜன், கட்சி நிர்வாகிகளுடன் நங்கநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், கொரோனா தொற்று, மழை வெள்ள பாதிப்பு போன்ற நேரங்களில் உங்களில் ஒருவனாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்துள்ளேன்.பல இடங்களில் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தபோது, விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு உதவி செய்துள்ளேன். பல வருட கோரிக்கையை ஏற்று பட்டா வாங்கி தந்துள்ளேன். செல்போனில் அழைத்து உதவி கேட்கும் மக்களுக்கு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளேன்.

குறைகளை தீர்த்துள்ளேன். தொடர்ந்து, மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள எனது சார்பாக நிறுத்தப்பட்டுள்ள எனது மனைவி துர்காதேவிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன், என்றார். வாக்கு சேகரிப்பின் போது நலச்சங்க நிர்வாகிகள் ராஜகோபாலன், ராதாகிருஷ்ணன், ராமச்சந்திரன், மாலதி, தயாளன், கோவிந்தராஜ், வட்ட நிர்வாகிகள் எல்.காசி, நாகராஜன், வேலு ரமணா, பிரான்சிஸ் சதீஷ், குமரேசன், கணேசன், ராஜ்குமார், சரவணன், சூர்ய.நாராயணன், ரெயின்போ துரை, பாலாஜி, துரைராஜ், கிருஷ்ணன், மணிமாறன், ரேணு, வஜ்ரவேல், தினேஷ்குமார், பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Tags : 167th Ward DMK ,Durgadevi Natarajan ,
× RELATED நங்கநல்லூர் பகுதியில் வரி சீரமைப்பு...