×

திட்டக்குடி அருகே ஆவணம் இன்றி பைக்கில் எடுத்து சென்ற ₹1.75 லட்சம் பறிமுதல்

திட்டக்குடி, பிப். 8:  திட்டக்குடி அருகே உரிய ஆவணம் இன்றி பைக்கில் எடுத்துச் சென்ற 1 லட்சத்து 75 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திட்டக்குடி அடுத்துள்ள பெருமுளை ரோட்டில் திட்டக்குடி சமூகநல தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈ.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் செல்வகுமார் (35) என்பவர் உரிய ஆவணம் இன்றி பைக்கில் எடுத்து வந்த 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திட்டக்குடி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆண்டவரிடம்  ஒப்படைத்தனர். தேர்தல் துணை தாசில்தார் ஜெயச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் ரவி, தலைமைக் காவலர் பெரியசாமி, காவலர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Tittakkudi ,
× RELATED திட்டக்குடியில் மனுக்கள் பெறும் முகாம்