×

உப்பிலியபுரம் பகுதியில் 5 கோயில்களில் உண்டியல் திருட்டு

துறையூர், பிப்.8: உப்பிலியபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட கிராமப் பகுதியில் அமைந்துள்ள 5 கோவில்களில் மர்ம நபர்கள் உண்டியல்களை திருடிச் சென்றனர். உப்பிலியபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட ஒக்கரை மாரியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் உண்டியலை திருடிச் சென்று அதிலிருந்த ரூ.5,000 பணத்தை எடுத்துக் கொண்டு அந்தப் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் உண்டியலை வீசிச் சென்றனர். இதேபோல் புதுப்பட்டியில் உள்ள காமாட்சியம்மன் கோயில் உண்டியலை திருடிச் சென்று அதிலிருந்த ரூ.1000த்தை எடுத்துச் சென்றுவிட்டனர். ஒ.கிருஷ்ணாபுரம் முருகன் கோயிலிலிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூ.20,000, கொப்பம்பட்டி ஆஞ்சநேயர் கோயில் உண்டியலை திருடிச் சென்று அதிலிருந்த ரூ.2,000ம், ராஜப்பாளையம் மாரியம்மன் கோயில் உண்டியலை திருடி ரூ. 1000த்தை திருடிச் சென்றனர். இது தொடர்பாக உப்பிலியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். ஒரே இரவில் 5 கோயில்களில் திருட்டு நடந்ததையடுத்து திருடர்கள் கிராமப்புறங்களில் உள்ள கோயில்களை குறி வைத்து திருடுவது பொதுமக்கள் மத்தியில் திருட்டு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Uppiliyapuram ,
× RELATED முருங்கப்பட்டியில் வேளாண் கல்லூரி...