×

தோகைமலை அருகே கீழவெளியூரில் வீட்டில் இருந்த மனைவி, மகன் மாயம்

தோகைமலை பிப் 8:தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி கீழவெளியூர் திருமலை நகரை சேர்ந்தவர் சேட்டு மகன் பெரியசாமி (48). கூலி தொழிலாளி. பெரியசாமிக்கு கஸ்தூரி (45) என்ற மனைவியும், தனலட்சுமி, பாக்கியலட்சுமி ஆகிய இரண்டு மகள்களும், விஜயகாந்த் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் தனலட்சுமிக்கு திருமணம் முடிந்ததால் அவர் கணவர் வீட்டில் வசித்து வருகிறார். பாக்கியலட்சுமி வேடந்தூர் பகுதியில் உள்ள தனியார் டெக்ஸ் கம்பெனியில் தங்கி வேலை செய்து வருகிறார். இதனால் பெரியசாமி, கஸ்தூரி மற்றும் 8 வயது உள்ள விஜயகாந்த் ஆகிய 3 பேரும் வீட்டில் வசித்து வந்து உள்ளனர்.

இந்நிலையில் பெரியசாமி நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு அன்று மாலை வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது வீடு பூட்டி இருந்ததால் வீட்டில் இருந்த மனைவி கஸ்தூரி மற்றும் மகன் விஜயகாந்த் ஆகியோரை காணவில்லை என அதிர்ச்சி அடைந்தார். இதனால் உறவினர்கள் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் இருவரையும் காணவில்லை. இதையடுத்து தோகைமலை காவல்நிலையத்தில் பெரியசாமி புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான கஸ்தூரி மற்றும் விஜயகாந்தை ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.

மகன் மாயம்: தோகைமலை அருகே கழுகூர் ஊராட்சி மாகாளிபட்டி காலனியை சேர்ந்தவர் முருகேசன் மகள் ரஞ்சிதா (21). இவர் கடந்த 4 மாதத்திற்கு முன்பு கரூர் கோவிந்தபாளையம் பகுதியில் உள்ள தனியார் டெக்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து தற்போது ரஞ்சிதா வீட்டில் இருந்து வந்து உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் படுக்கை அறையில் தூங்கிக்கொண்டு இருந்து உள்ளார். அன்று அதிகாலை 5 மணிக்கு முருகேசன் எழுந்து பார்க்கும் போது தூங்கிக்கொண்டு இருந்த ரஞ்சிதாவை காணவில்லை.இதுகுறித்து தோகைமலை காவல்நிலையத்தில் முருகேசன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான ரஞ்சிதாவை தேடி வருகின்றனர்.

Tags : Mayam ,Keelaveliyoor ,Tokaimalai ,
× RELATED தனியார் நிறுவன ஊழியர் மாயம்