×

குடியாத்தம் அருகே ஜேசிபி டிரைவர் தற்கொலை

குடியாத்தம், பிப்.8: குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை(25), ஜேசிபி டிரைவர். இவரது மனைவி சாரதா. ஒரு வயதில் மகன் உள்ளார். அண்ணாமலைக்கு கடந்த 4 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்ைச பெற்று வந்தார். இருப்பினும் குணமாகவில்லையாம். இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் உடல் நலம் பாதிப்படைந்ததால் மனவிரக்தி அடைந்தார். இதையடுத்து அவர், சைனகுண்டா அருகே மலையடிவாரத்தில் உள்ள நிலத்திற்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அண்ணாமலை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி சாரதா குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : JCP ,Gudiyatham ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல்...