×

பள்ளத்தூரில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

காரைக்குடி: காரைக்குடி அருகே பள்ளத்தூரில் மாற்று கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளார். காரைக்குடி அருகே பள்ளத்தூர் முதல்நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் ருக்மணி வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக திமுக நிர்வாகி செல்லம்மை வேட்புமனு தாக்கல் செய்தார். மாற்றுகட்சியினர் யாரும் இந்த வார்டில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு வாபஸ் பெறும் நாளான நேற்று மாற்று வேட்பாளர் செல்லம்மை தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

இதனை தொடர்ந்து திமுக வேட்பாளர் ருக்மணி போட்டியின்றி தேர்வு பெற்றதற்கான சான்றை செயல்அலுவலர் உமாமகேஸ்வரன் வழங்கினார். வெற்றி பெற்ற வேட்பாளர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனை சந்தித்து வாழ்த்துபெற்றார். முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் கே.எஸ்.ரவி, பேரூராட்சி செயலாளர் ஆனந்தன், மாவட்ட பிரதிநிதி அழகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Pallathur ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி