×

வருசநாடு அருகே‌ பவள நகரில் தரைப்பாலம் சேதம்

வருசநாடு: வருசநாடு அருகே, பவள நகரில் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு ஊராட்சியில் பவள நகர் கிராமம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பால்வாடி தெருவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டது. இப்பாலத்தை போக்குவரத்துக்கு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Varusanadu ,
× RELATED வெளிமாநில வரத்து அதிகரிப்பு வருசநாட்டில் தேங்கும் தேங்காய்கள்