×

தூத்துக்குடி மாநகராட்சி 59வது வார்டு அதிமுக வேட்பாளர் எஸ்பிஎஸ் ராஜா தங்கம்மாள்புரத்தில் வாக்குசேகரிப்பு

தூத்துக்குடி, பிப். 7:  தூத்துக்குடி மாநகராட்சி 59வது வார்டு அதிமுக வேட்பாளர் எஸ்பிஎஸ் ராஜா, தங்கம்மாள்புரம் பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி 59வது வார்டில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் வக்கீல்  எஸ்.பி.எஸ். ராஜா, வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று தங்கம்மாள்புரம், சண்முகபுரம், அபிராமி நகர், சூசை நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் வார்டுக்கு உட்பட்ட முக்கிய பிரமுகர்களையும் பெரியவர்களையும் சந்தித்து ஆசி மற்றும் வாழ்த்துப் பெற்றார்.  நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முன்னாள் கவுன்சிலர் சுடலைமணி, பொதுக்குழு உறுப்பினர்  மாரியப்பன், வட்ட பிரதிநிதிகள் மாரிமுத்து, வடிவேல், மதிவாணன் மற்றும் வக்கீல் கோமதி மணிகண்டன், ஒன்றியச் செயலாளர் அழகேசன், ரஞ்சித், கிருஷ்ணா, சிவபெருமாள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Thoothukudi Corporation ,Ward ,AIADMK ,SPS ,Raja Thangammalpuram ,
× RELATED மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள...