உடன்குடி, பிப். 7: குலசேகரன்பட்டினத்தில் நடந்த சைவ வேளாளர் சங்க கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி சங்கத் தலைவராக சண்முகவேல், செயலாளராக சிதம்பரநாதன், பொருளாளராக தர்மலிங்கம், இணைச் செயலாளராக கண்டவேல் தேர்வு செய்யப்பட்டனர். இதே போல் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக சுப்பிரமணியன், வீரபாகு, வர்ணகுலபாண்டியன், கண்ணன், செல்லப்பா, லட்சுமணன், மீனாட்சிசுந்தரம், இல்லங்குடி, சிதம்பர விநாயகம் ,கல்யாணசுந்தரம், கவுரவ ஆலோசகராக முருகன் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் வரவு- செலவு திட்ட அறிக்கை வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.