×

கரூர் பண்டரிநாதன் கோயில் கும்பாபிஷேகம்

கரூர், பிப். 7: கரூர் பண்டரிநாதன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கரூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பண்டரிநாதன் கோயில். கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக கோயில் வளாகத்தில் பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் கரூர் மற்றும் புறநகர்ப்பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் போன்றவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Karur Bandarinathan ,Temple Kumbabhishekam ,
× RELATED முசிறி அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்