×

உடையார்பாளையம் அருகே ஓடையில் மணல் கடத்திய வாலிபர் கைது

ஜெயங்கொண்டம், பிப்.7: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மணகெதி விஏஓ ராஜேந்திரபிரசாத் தனது உதவியாளருடன் அப்பகுதியில் ஓடையில் மணல் திருட்டு நடப்பதாக கிடைத்த தகவல்படி அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஓடை மணலை டிராக்டரில் அள்ளிக் கொண்டிருந்த நபரை விஏஓ பிடித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் விசாரணையில் நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த விவேகானந்தன் (25) என்பவர் டிராக்டர் மூலம் மணல் கடத்தி கொண்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விவேகானந்தனை கைது செய்து அவரிடம் இருந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Tags : Udayarpalayam ,
× RELATED டூவீலர் மீது பிக்கப் வேன் மோதியதில் 2 பேர் காயம்