×

புதுகை எஸ்பி நிஷாபார்த்திபன் தகவல் அன்னவாசல் அருகே வாகனம் மோதி தொழிலாளி சாவு

விராலிமலை, பிப்.7: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள புல்வயலை சேர்ந்தவர் அழகர்(50). இவர் நேற்று முன்தினம் புல்வயலில் உள்ள இவரது வீட்டில் இருந்து திருவள்ளுவர் நகர் வழியாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Budugai ,SP ,Nishaparthiban ,Annavasal ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்