துவரங்குறிச்சி, பிப். 7: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் திடீர் நகரை சேர்ந்த பாண்டியன்(45) என்பவரிடம் 11 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் எம்.இடையப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் துவரங்குறிச்சி பெட்ரோல் பங்க் அருகில் மது விற்பனை செய்து வந்த நிலையில் அவரையும் துவரங்குறிச்சி காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். வையம்பட்டி டாஸ்மாக் கடை அருகில் மதுபானம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் வையம்பட்டி உதவி ஆய்வாளர் வினோத் குமார் தவளைவீரம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜன்(55) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 43 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.