×

பெரணமல்லூரில் முத்து புளியாத்தம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

பெரணமல்லூர், பிப்.7: பெரணமல்லூரில் நேற்று நடைபெற்ற முத்து புளியாத்தம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பெரணமல்லூர் பேரூராட்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட முத்து புளியாத்தம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கும்பாபிஷேகம் முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5மணிக்குமேல் யாகசாலை அமைக்கப்பட்டு மகாகணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து வாஸ்துசாந்தி, பிரவேசபலி, முதலாம் கால யாகபூஜை நடந்தது. பின்னர் காலை 7 மணிக்கு கோபூஜை, கஜபூஜை, தம்பதிபூஜை மற்றும் இரண்டாம் கால யாகபூஜையும் நடைபெற்றது. மேலும் மகாசங்கல்பமும் மகாபூர்ணாஹூதியும் 9.25 மணிக்குமேல் மேளதாள ஊர்வலத்துடன் புனிதநீர் அடங்கிய கலசங்கள் சிவாச்சாரியார்களால் யாகசாைலையில் இருந்து கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து 9.40 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். அனைவக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Muthu Puliathamman Temple ,Mahakumbabhishekam ,Peranamallur ,
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...