×

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி லோடு வாகனம் நிறுத்த நிரந்தர இடம் ஒதுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வாகனங்களை நிறுத்துவதற்கு நிரந்தரமாக இடம் ஒதுக்க முடியாது என்று சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோயம்பேடு காய்கனி மார்க்கெட் வளாகத்தில்  உள்ள தக்காளி மைதானத்தை திறக்க கோரி, தந்தை பெரியார் தக்காளி மொத்த  வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது,  அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாகனங்களை நிறுத்தக்கூடிய இடத்தில்  சிறுகடைகளின் உரிமையாளர்கள் விற்பனை செய்ததால் மைதானம் மூடப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி சார்பில் 800 வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, கொரோனா பரவல் மற்றும் தக்காளி விலை உயர்வை  கருத்தில் கொண்டுதான் தக்காளி ஏற்றி வரும் வாகங்களை நிறுத்துவதற்கு  தற்காலிகமாக இடம் ஒதுக்கப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்புவதால் தக்காளி ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக நிரந்தரமாக இடம் ஒதுக்கமுடியாது. சட்ட விரோதமாக வாகனங்களை நிறுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags : Coimbatore Market ,High Court ,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...