×

கொள்ளிடத்தில் குடந்தை கூட்டுறவு வங்கி நகை மதிப்பீட்டாளர் டூவீலர் திருட்டு

கொள்ளிடம், பிப்.4: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ராம்நகரைச் சேர்ந்த வீரண்ணன் மகன் நேரு(46). இவர் கொள்ளிடம் பஸ் நிலையம் அருகே உள்ள கும்பகோணம் கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று பிற்பகல் 11 மணி அளவில் வங்கிக்குச் சென்று வங்கி வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்று, பிறகு மதிய உணவு இடைவேளையின் போது மீண்டும் வந்து இரு சக்கர வாகனத்தை பார்த்தபோது, டூவீலரை காணவில்லை. இதுகுறித்து நேரு கொள்ளிடம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளிடம் பகுதியில் மட்டும் கடந்த ஆறு மாத காலத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு போய் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இரு சக்கர வாகனங்கள் திருட்டு போகாமல் இருப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kuttan Co ,Bank ,Kollidam ,
× RELATED ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி:...