×

வேலாயுதம்பாளையம் பகுதியில் கோழிக் கழிச்சல் நோய் தடுப்பு முகாம்

வேலாயுதம்பாளையம், பிப்.4: வேலாயுதம்பாளையம் பகுதியில் நடந்த கோழி கழிச்சல் நோய் தடுப்பு முகாமினை கால்நடைதுறை உதவி இயக்குனர் டாக்டர் லில்லிஅருள்குமாரி ஆய்வு செய்தார். வேலாயுதம்பாளையம் பகுதிகளில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் நோய் புலனாய்வு துறை உதவி இயக்குனர் டாக்டர் லில்லி அருள் குமாரி தலைமை வகித்தார். முகாமில் நொய்யல் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் டாக்டர் உஷா மற்றும் குழுவினர் கலந்து கொண்டு முகாமிற்கு வந்து இருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி போட்டனர். முகாமில் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் கோழிகளை கொண்டுவந்து கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி போட்டுக் கொண்டு சென்றனர்.

Tags : Velayuthampalayam ,
× RELATED புகழிமலை பாலசுப்பிரமணிய கோயிலில் திரளான பக்தர்கள் கிரிவலம்