×

எட்டயபுரம் பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக, பாஜ, நாம்தமிழர் கட்சி உள்பட 27 பேர் வேட்புமனு தாக்கல்

எட்டயபுரம், பிப். 4: எட்டயபுரம் பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக, பாஜ, நாம்தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 27 பேர், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். எட்டயபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் போட்டியிடுவதற்கு நேற்று அதிமுக சார்பில் 6வது வார்டு முனியசாமி, 8 ஷேக்மைதீன் 9 காளிதாஸ், 15 அய்யம்மாள், நாம்தமிழர்கட்சி 4வது வார்டு பாலாஜி, பாஜ 1வது வார்டு சொர்ணலதா, 9 மாரியம்மாள் உட்பட 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். எட்டயபுரம் பேரூராட்சி தேர்தல் அலுவலர் கணேசன், துணை தேர்தல் அலுவலர்கள் மகாராஜா, அழகுசுந்தரி ஆகியோர் வேட்புமனுவை பெற்று கொண்டனர். நாம்தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாண்டி, பாஜ மாவட்ட செயலாளர் ஆத்திராஜ், எட்டயபுரம் ஒன்றிய தலைவர் ராம்கி, எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்த கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் ஜின்னாபீர்முகமது, எஸ்ஐ பொன்ராஜ் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.

Tags : DMK ,AIADMK ,BJP ,Namthamil ,Ettayapuram Municipal Council ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...