×

சாத்தான்குளம் அருகே மாஜி பஞ். தலைவர் வீடு உள்பட 2 இடத்தில் நகை, பணம் கொள்ளை

சாத்தான்குளம், பிப். 4: சாத்தான்குளம் அருகே உள்ள வசவப்பனேரியை சேர்ந்தவர் பொன்ராஜ் (49). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பிரோவில் இருந்த 3.5 பவுன் நகை திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ அருள்சாம்ராஜ் வழ்க்கு பதிந்து  விசாரணை நடத்தி வருகிறார். இதேபோல் தட்டார்மடம் அருகே உள்ள புத்தன்தருவை சேர்ந்த பஞ்சாயத்து முன்னாள் தலைவரான சித்திரைக்கனி (50), திருப்பூரில் உள்ள மகனை பார்க்க 2 நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் ஓடு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் ரூ.30 ஆயிரம் கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Former ,Panch ,Sathankulam ,
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...