×

தனித்தனி விபத்தில் வியாபாரி, கொத்தனார் பலி

விக்கிரவாண்டி, பிப். 3 : விக்கிரவாண்டி  அடுத்த கயத்துார் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (40) கொத்தனார். இவர்  நேற்று முன்தினம் பைக்கில் திருக்கனூருக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். மதுரப்பாக்கம் சோதனை சாவடி அருகே வரும்போது எதிரேவேகமாக வந்த டிப்பர் லாரி, பைக் மீது மோதியதில் சண்முகம் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொரு விபத்து: விக்கிரவாண்டி மைல்கல் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (71) வியாபாரி. இவர் நேற்று காலை மொபெட்டில் பனையபுரத்திலுள்ள நிலத்திற்கு சென்று வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். பனையபுரம் வி.ஏ.ஓ. அலுவலகம் அருகே வந்தபோது எதிரே வந்த பைக், மீது மோதியது. இதில் தலையில் காயமடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரு விபத்துகள் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர் .

Tags : Trader ,
× RELATED லாரி மோதியதில் வியாபாரி பலி