×

செயல்படாத டிஜிட்டல் அறிவிப்பு பலகை தோகைமலை அருகே மின்ஊழியர்களிடம் தகராறு: ஒருவர் கைது

தோகைமலை, பிப்.3: தோகைமலை அருகே ஆர்.டிமலை ஊராட்சி அழகாபுரியை சேர்ந்த ரங்கன் மகன் முருகேசன் (47). இதேபோல் இவரது அண்ணன் கணேசன் (50). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இதில் கணேசன் வசிக்கும் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க காவல்காரன்பட்டி துணை மின் நிலையத்தின் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்து உள்ளனர். அப்போது மின்துறை பணியாளர்கள் மின் இணைப்பு வழங்குவதற்காக அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்து உள்ளனர். இதனால் அருகில் வசிக்கும் பொன்னம்பலம் மகன்கள் சிவக்குமார்(35), சக்தி(30) ஆகிய இருவரும் மின் இணைப்பை எப்படி துண்டிக்கலாம் என்று மின்துறை அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதில் மின் துறை பணியாளர்கள்முருகேசன் வீட்டிற்குள் தஞ்சம் அடைந்து உள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த சிவக்குமார் மற்றும் சக்தி ஆகிய இருவரும் முருகேசன் வீட்டை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து முருகேசன் தோகைமலை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிவக்குமார் மற்றும் சக்தி ஆகிய இருவர் மீது வழக்குப்பதிந்த போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான சக்தியை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Tokaimalai ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...