×

தோகைமலை அருகே நடைபாதை சம்பந்தமாக முன் விரோதம் விவசாயியை தாக்கிய 8 பேர் மீது வழக்கு

தோகைமலை,பிப்.3: தோகைமலை அருகே நடைபாதை சம்பந்தமாக விவசாயியை தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோகைமலை காவல்சரகம் கடவூர் பகுதியில் உள்ள பண்ணப்பட்டி ஊராட்சி பி.உடையாபட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் எடல் இன்னாசி (33). இவரது குடும்பத்திற்கும் இதே பகுதியில் வசிக்கும் வின்சென்ட் குடும்பத்திற்கும் நடை பாதை சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் எடல் இன்னாசி தனது தோட்டத்தில் இருந்து உள்ளார். அப்போது இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு வரும் பாதையில் வின்சென்ட் போர்வெல் வாகனத்தை ஓட்டி வந்து உள்ளார;.

இதனால் இந்தவழியாக எப்படி வாகனத்தை ஓட்டி வரலாம் என்று எடல் இன்னாசி கேட்டு உள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து வின்சென்ட் மற்றும் வின்சென்ட் தரப்பை சேர்ந்த விண்ணரசு, ஜோசப், ரத்தினம், ஜேசுதாஸ், குழந்தைசாமி, சகாயராணி, எலிசா ஆகியோர் திட்டி எடல் இன்னாசியை தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மைலம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து எடல் இன்னாசி தோகைமலை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வின்சென்ட் மற்றும் வின்சென்ட் தரப்பை விண்ணரசு, ஜோசப், ரத்தினம் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tokaimalai ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு