×

வரும் 10ம் தேதி நடக்கிறது துறையூர் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரிக்கு ஏ+ தரச்சான்று

துறையூர், பிப். 3: திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டியில் 54 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நேரு நினைவுக் கல்லூரி 12 துறைகளை கொண்டுள்ளது. இக்கல்லூரி ஏற்கனவே 2013ம் ஆண்டில் தேசிய தர மதிப்பீட்டில் முதல் சுற்றில் ஏ தகுதியை பெற்றிருந்தது. தற்போது நாக் கமிட்டியின் இரண்டாம் சுற்று மதிப்பீட்டில் நேரு நினைவுக் கல்லூரி புதிய மதிப்பீட்டு முறையின் அடிப்படையில் விண்ணப்பித்து அறிக்கையை சமர்ப்பித்தது. ஆய்வுக்குழுவினர் கடந்த ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்தனர். அதை தொடர்ந்து நேரு நினைவு கல்லூரிக்கு ஏ ப்ளஸ் (A+) தகுதியை நாக் கமிட்டி வழங்கியுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் பொன்பெரியசாமி கூறுகையில் நேரு நினைவுக் கல்லூரியின் கற்றல் கற்பித்தல் திறன், ஆராய்ச்சி, பெற்றோர் முன்னாள் மாணவர்கள் பின்னோட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 4 மதிப்பெண்களுக்கு 3.28 மதிப்பெண் பெற்று நேரு நினைவுக் கல்லூரி ஏ+ தகுதி பெற்றுள்ளது.
இந்த தகுதியின் மூலம் மாணவர்களுக்கு உயர் அங்கீகாரம், வேலை வாய்ப்புகளில் அதிக முன்னுரிமை ஆகியவற்றுடன் அரசு வழங்கும் நிதி உதவிகளும் அதிகரிக்கும் என்று முதல்வர் தெரிவித்தார்.

Tags : Puthanampatti Nehru Memorial College ,Thuraiyur ,
× RELATED துறையூர் அருகே கார், ஆட்டோ மோதல் முதியவர் பரிதாப பலி