×

தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்: டிஆர்இயூ ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

மதுரை: மதுரை ரயில்வே கோட்டத்தில் மேற்கு நுழைவு வாயிலில் டிஆர்இயூவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்ட தலைவர் ஆன்ட்ரன் தலைமை வகித்தார். கோட்ட பொருளாளர் சரவணன், சிபிஐஎம் மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். சிஐடியூ மாவட்ட செயலாளர் தெய்வராஜ், டிஆர்இயூ உதவி பொது செயலாளர் திருமலை அய்யப்பன், கோட்ட இணை செயலாளர் சங்கர நாராயணன் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே காலி இடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். ரயில்வே நிலையங்கள், ரயில்வே பணிமனைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்.

சங்க அங்கீகார தேர்தலை உடனடியாக நடத்தும் வரை பதிவு பெற்ற டிஆர்இயூ உள்ளிட்ட சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ரயில்வே மருத்துவமனைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். மதுரை- ராமேஸ்வரம், மதுரை- கோயம்புத்தூர் வழித்தடங்களில் அதிக ரயில்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிட்டனர். உதவி கோட்ட தலைவர் வினோத் பாபு நன்றி கூறினார்.

Tags : Tamil Nadu ,DREU ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...