×

சூலூரில் வேட்பு மனு தாக்கல் மந்தம்

சூலூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தமிழக முழுவதும் சூடிபிடித்துள்ள நிலையில் சூலூரில் மந்த கதியில் வேட்பு மானு நடைபெற்று வருகிறது. சூலூர் பேரூராட்சியில் 2 பேரும், பள்ளபாளையம் பேரூராட்சியில் 3 பேரும் என மொத்தம் 5 பேர் இதுவரை மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ஒரே ஒரு காங்கிரஸ் வேட்பாளர் ஆவார். கண்ணம்பாளையம் பேரூராட்சியில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அமாவாசை தினமான நேற்று அதிகளவில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் யாரும் மனு தாக்கல் செய்யாதது அதிகாரிகளியிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. வரும் நாட்களில் மனுதாக்கல் எண்ணிக்கை ஒரே நேரத்தில் அதிகரிக்கும் நிலை ஏற்படலாம் என தெரிகிறது.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...